காதலை சொல்லாதவன்
============================================ கரை தாண்டி வர துடிக்கும் என் காதல் உன் கண்கள் பார்த்து அடங்குவதே அதன் தேடல் பல நாள் சுனாமியாக மாற அது எத்தனிக்கும் சில பின்விளைவை எண்ணியே மனம் தத்தளிக்கும் எரிமலைக்குள் ஓடும் தீக்குழம்பாய் என் காதல் வெளி வரும் வழி தெரியாமலே, உறைந்தே போனது. யார் சொன்னது, நான் காதலிக்கவில்லை என்று நான் காதலை சொல்லாதவன். --------------------------------------------